தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் வரும் என்று, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் கருத்து தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் திமுக பிரமுகர் சண்முகநாதன் இறப்பையொட்டி, துக்கம் விசாரிக்க வந்த அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
யாருக்கும் ஆதரவில்லை
எடப்பாடி பழனிசாமி தலை மையிலான ஆட்சி, எத்தனை நாள் அமையும் என தீர் மானிக்க முடியாது. நம்பிக்கை வாக்கெடுப்பில், திமுக ஒருபோதும் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக் காது. தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் விவகாரத்தில், திமுக யாருக்கும் ஆதரவு அளிக்காது. நம்பிக்கை வாக்கெடுப்பிலும் யாருக்கும் ஆதரவு அளிக்கமாட்டோம்.
தமிழகத்தின் எதிர்காலம் திமுக பெறும் வெற்றியை பொறுத்து உள்ளது. கொங்கு மண்டலத்தில், திமுக எப்போதும் வளர்ந்துகொண்டேதான் இருக் கிறது. திமுக தலைவர் கருணாநிதி நலமாக உள்ளார். அவரது உடல்நலம் மெல்ல, மெல்ல தேறி வருகிறது.
எத்தனை நாள்
எடப்பாடி பழனிசாமி கர்நாடகாவுக்கு சென்று சசிகலாவை சந்திப்பது பற்றி கவலை இல்லை. சட்டப்பேரவைத் தேர்தல் வெகு விரைவில் வரும். அது எத்தனை நாள் அல்லது மாதம் என்று சொல்ல முடியாது.
சொத்துக்குவிப்பு வழக்கை கர்நாடகாவுக்கு மாற்றியவன் என்ற முறையில், தற்போது கிடைத்துள்ள தீர்ப்பு மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
திமுக மாநில இளைஞரணி செயலாளர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
41 mins ago
இந்தியா
50 mins ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago