புதுச்சேரி முன்னாள் எம்.பி கண்ணன் அதிமுகவில் இருந்து விலகல்

By செய்திப்பிரிவு

புதுச்சேரி முன்னாள் எம்பி கண்ணன் அதிமுகவில் இருந்து நேற்று விலகினார்.

தமிழக சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக சசிகலா நேற்று தேர்வானார். இந்நிலையில், முன்னாள் எம்பி கண்ணன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: அதிமுக வின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து விலகுகிறேன். என்ன காரணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அடுத்தகட்ட முடிவு தொடர்பாக உரிய தரு ணத்தில் தெரிவிப்பேன் என்றார்.

புதுச்சேரி அரசியலில் முக்கி யத் தலைவர்களில் கண்ணனும் ஒருவர். இவர் கடந்த 1985-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர் தலில் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரானார். கடந்த 1996-ல் தமாகா கட்சியின் புதுச்சேரி மாநில தலைவரானார். 2000-ம் ஆண்டு திமுக - தமாகா கூட் டணி உடைந்தது. அதன் பின்னர் காங்கிஸுடன் கூட்டணி அமைத்து அதே பதவியை தக்க வைத்துக் கொண்டார். பின்னர், தேனீ ஜெயக்குமாருடன் மோதல் ஏற்பட்டதன் காரணமாக அமைச்சர் பதவியை இழந்தார்.

இதனால், 2001-ல் புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். 2006-ல் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி, அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டார். 2009-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது மீண்டும் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சியை காங்கிரஸுடன் இணைத்தார். காங்கிரஸ் கட்சி அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கியது. கடந்த 2016 பிப்ரவரி 14-ல் அதிமுகவில் இணைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

7 mins ago

ஜோதிடம்

26 mins ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

9 hours ago

ஆன்மிகம்

9 hours ago

மேலும்