தீவிரவாதிகள் ஊடுருவலை அரசு தடுக்காதது ஏன்? காங். கேள்வி

By செய்திப்பிரிவு

மெரினா போராட்டத்தில் தீவிரவாதி கள் ஊடுருவலை அரசு தடுக்காதது ஏன் என்று சட்டப்பேரவை காங் கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி கேள்வி எழுப்பினார்.

சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக் கும் தீர்மானத்தின் மீது பேசிய ராமசாமி, ‘மெரினா கடற்கரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. தற்போது எந்தப் பிரச் சினையும் இல்லாத நிலையில் எதற் காக இந்தத் தடை? போராட்டத்தில் தீவிரவாதிகள் நுழைந்துள்ளதாக கூறியுள்ளீர்கள். அவர்களை அரசு ஏன் தடுக்கவில்லை? தமிழகம் அமைதிப்பூங்கா வாக திகழ்கிறது என்கிறீர்கள். அப்படி இருக்கும்போது தீவிர வாதிகள் எப்படி நுழைந் திருக்க முடியும். இது தொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்:

மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் நடத்திய போராட் டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக கூறப்பட்டது. இவர்கள் யார் என்பது தொடர் பான விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 min ago

வணிகம்

5 mins ago

சினிமா

2 mins ago

உலகம்

24 mins ago

வணிகம்

30 mins ago

இந்தியா

40 mins ago

இந்தியா

50 mins ago

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்