நடிகர் பார்த்திபன் உட்பட 9 பேருக்கு பெரியார் விருது: திராவிடர் கழகம் வழங்குகிறது

By செய்திப்பிரிவு

திராவிடர் கழகம் நடத்தும் பொங்கல் விழாவில் நடிகர் பார்த்திபன் உட்பட 9 பேருக்கு பெரியார் விருது வழங்கப்பட உள்ளது.

இது தொடர்பாக திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை வேப்பேரி பெரியார் திடலில் வரும் 15, 16 தேதிகளில் திராவிடர் கழகம் சார்பில் திராவிடர் திருநாள் விழா நடக்கிறது. இதில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தமிழர்களுக்கு பெரியார் விருது வழங்கப்படுகிறது.

நடிகர், இயக்குநர் பார்த்திபன், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி.அமுதவன், எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன், திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன், பொருளாதார நிபுணர் ஜெ.ஜெய ரஞ்சன், தன்னம்பிக்கை பேச்சாளர் இன்ஸ்பைரிங் இளங்கோ, எழுத்தாளர் ஜெயராணி, இசை யமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் ஆகியோருக்கு பெரியார் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகளை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வழங்கு வார்.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

46 mins ago

இந்தியா

55 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்