முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இன்று முதல் 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் உட்கட்சிப் பூசல் காரணமாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு 'Y' பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் அதிமுகவில் பிளவுப்பட்ட இரு அணிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இன்றுமுதல் 'Y' பிரிவு பாதுக்காப்பு அளிக்கப்படும் என்று கடந்த 20 நாட்களுக்கு முன்னர் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் Y பிரிவு பாதுகாப்பு படையினர் பன்னீர்செல்வத்துக்கு பாதுகாப்பு வழங்க தொடங்கியுள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்துக்கு துப்பாக்கி ஏந்திய 8 துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு அளிக்க உள்ளனர்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு ஏற்கனவே மத்திய பாதுகாப்பு படைகளில் இருந்து பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
சினிமா
5 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
சினிமா
10 hours ago
இந்தியா
11 hours ago