வேலூர் அருகே விவசாய நிலத்தில் ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் கையெறி வெடிகுண்டை போலீஸார் மீட்டனர். இதுகுறித்து சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் விசாரணை நடத்தினார்.
வேலூர் மாவட்டம் அமிர்தி அடுத்த நாகநதி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தஞ்சி(54). நேற்று காலை தஞ்சி, அதே பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்துக்கு மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றார். அப்போது, உருண்டை வடிவில் இரும்பினால் ஆன வெடிகுண்டு ஒன்று தனது நிலத்தில் கிடப்பதை பார்த்துள்ளார். இதுகுறித்து வேலூர் தாலுகா போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீஸார் விரைந்து வந்து வெடிகுண்டை பறிமுதல் செய்தனர். அந்த வெடிகுண்டு, ராணுவ வீரர்கள் போர்க்களத்தில் எதிரிகள் மீது வீசும் சக்தி வாய்ந்த கையெறி வெடிகுண்டு என்பதும் அது கடந்த 1979-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது எனவும் தெரியவந்தது. அந்த வெடிகுண்டு வெடித்திருந்தால் சுமார் 10 மீட்டர் தொலைவுக்கு சேதமடைந்திருக்கும் என்று கூறப்படுகிறது.
தகவல் அறிந்த வேலூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் பகலவன் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தார். ராணுவத்தில் வீரர்கள் பயன்படுத்தும் வெடிகுண்டை அப்பகுதியில் விவசாய நிலத்தில் வீசிச் சென்றது யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 min ago
சினிமா
46 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
சினிமா
5 hours ago
இந்தியா
6 hours ago
வணிகம்
14 hours ago