கார் பந்தய வீரர் விபத்தில் சிக்கிய வேகத்தடையில் வர்ணம் பூச்சு

By செய்திப்பிரிவு

பட்டினப்பாக்கத்தில் கடந்த சனிக்கிழமை அதிகாலை நடந்த சாலை விபத்தில் சொகுசு கார் எரிந்து தமிழக கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் உயிர் இழந்தார். அவரது மனைவி நிவேதா வும் உடல் கருகி பலியானார். வேக மாக சென்ற சொகுசு கார் வேகத்தடையில் ஏறி இறங்கும் போது விபத்து ஏற்பட்டது.

சென்னையில் உள்ள பெரும் பாலான சாலைகளில் உள்ள வேகத்தடைகளில் வர்ணம் பூசப் படவில்லை. இதனால், வேகத் தடை இருப்பது தெரியாமல் விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்ப தாக ‘தி இந்து’ நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக அஸ்வின் சுந்தர் விபத்தில் சிக்கிய வேகத் தடையில் நேற்று காலை வர்ணம் பூசப்பட்டது.

இதேபோல வர்ணம் பூசப் படாமல் இருக்கும் மற்றும் வர்ணமடித்து அழிந்திருக்கும் வேகத்தடைகள் மீது விரைவில் வர்ணம் பூசப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 mins ago

இந்தியா

49 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

உலகம்

4 hours ago

ஆன்மிகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்