தேனி அருகே பரிதாபம்: பேருந்து - வேன் மோதிய விபத்தில் கேரளாவை சேர்ந்த 6 பேர் பலி

By செய்திப்பிரிவு

தேனி பரசுராமபுரம் அருகே நேற்று நடந்த கோர விபத்தில் இடுக்கி யைச் சேர்ந்த 6 பேர் பலியாயினர்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட் டம் கட்டப்பனை அருகேயுள்ள தங்கமணி பகுதியைச் சேர்ந்த 7 பேர், வேனில் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்றனர்.

சுற்றுலாவை முடித்துக் கொண்டு நேற்று மாலை அவர்கள் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். தேவதானப்பட்டி அருகே பரசுராம புரத்தில் வந்தபோது, எதிர் திசை யில் பெரியகுளத்தில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது வேன் பயங்கர மாக மோதி யது.

இதில் வேனில் பயணம் செய்த இடுக்கியைச் சேர்ந்த அஜிஸ், ஜெஸ்டின், மூன்சி, சைன், பேபி, லூன்சி ஆகியோர் சம்பவ இடத்தி லேயே பலியாயினர். இவர்களில் பேபி விபத்துக்குள்ளான வேனின் ஓட்டுநர் ஆவார். 6 பேரின் உடல் களும் தேனி அரசு மருத்துவ மனைக்கு கொண்டுச் செல்லப் பட்டன. விபத்தில் வேன் முற்றிலும் உருக் குலைந்தது.

விபத்தில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த சிலர் காயமடைந் தனர். அவர்கள் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தேவதானப்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து பற்றி கேரளாவில் உள்ள அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தேனிக்கு விரைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்