மின்வெட்டு பிரச்னையை தீர்க்க முடியாத அதிமுக அரசு ஆட்சியில் இருந்து விலக வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு இன்று சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
"செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யாராக இருந்தாலும், ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும். தமிழகத்தில் நிலவும் மின்சார பற்றக்குறையை போக்க அதிமுக அரசு எந்த ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசை மட்டுமே குறை கூறுவதை ஏற்க முடியாது.
மின்வெட்டு பிரச்சினையில் மத்திய அரசை மட்டுமே குறை கூறும் அதிமுக அரசு, தேர்தலின்போது இதைச் சொல்லியா ஓட்டு கேட்டார்கள்? தமிழகத்தை ஆட்சி செய்த திமுகவும், அதிமுகவும் மின்சார பிரச்னையை தீர்க்க இது வரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? மின்வெட்டு பிரச்னையை தீர்க்க முடியாத அதிமுக அரசு ஆட்சியில் இருந்து விலக வேண்டும்" என்றார் விஜயகாந்த்.
முக்கிய செய்திகள்
சினிமா
42 mins ago
வலைஞர் பக்கம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
51 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
ஓடிடி களம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago