மத்திய அரசு ஊழியர் மகா சம் மேளனத்தின் (தமிழ்நாடு) மாநில மற்றும் தேசிய மாநாடு ஆகஸ்ட் 15-ல் (நாளை) சென்னையில் தொடங்குகிறது.
இது தொடர்பாக சம்மேளனத் தின் மாநில பொதுச்செயலர் எம்.துரைபாண்டியன் சென்னை யில் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த சம்மேளனத்தின் தமிழ் நாடு மாநில மாநாடு ஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தர்மபிரகாஷ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. அதில் விடுதலை போராட்டத் தியாகி என்.சங்கரய்யா பங்கேற்று மாநாட்டை தொடங்கி வைக்கிறார். சம்மேளனத்தின் தேசிய பொதுச் செயலர் என்.கிருஷ்ணன் சிறப் புரையாற்றுகிறார்.
16-ம் தேதி, சம்மேளனத்தின் 25-வது தேசிய மாநாடு அதே இடத்தில் நடைபெறுகிறது. சிஐடியூ தொழிற்சங்க தேசிய தலைவர் ஏ.கே.பத்மநாபன் மாநாட்டை தொடங்கிவைக்கிறார். எம்பிக்கள் டி.கே.ரங்கராஜன், ஆர்.எஸ்.பாரதி பங்கேற்று சிறப்புரையாற்று கிறார்கள். சென்னை உயர் நீதி மன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
17-ம் தேதி நடைபெறும் மகளிர் மாநாட்டை முன்னாள் துணை வேந்தர் வசந்தி தேவி தொடங்கி வைக்கிறார்.
செப்டம்பர் 2-ல் காலவரை யற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருக்கிறோம். இது தொடர்பாக 3 நாள் மாநாட்டில் விவாதித்து உரிய முடிவுகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
4 mins ago
தமிழகம்
25 mins ago
இந்தியா
11 mins ago
இந்தியா
54 mins ago
உலகம்
1 hour ago
வணிகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
வாழ்வியல்
5 hours ago