அனைத்து எம்எல்ஏ-க்களும் தங்களது தொகுதிக்குச் சென்று மக்களின் கருத்தைக் கேட்க வேண்டும் என்று சட்டப் பேரவை உறுப்பினர் ஆறுக்குட்டி தெரி வித்தார்.
கவுண்டாம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுக் குட்டி முதல்வர் ஓ.பன்னீர்செல் வத்துக்கு ஆதரவாக உள்ளார். நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருக்கிறேன். இவருடன் இணைந்த பிறகு, எனது தொகுதி மக்களிடம் இருந்து தொடர்ந்து எனக்கு ஆதரவு வந்துக் கொண்டிருக்கிறது. எந்தவிதமான எதிர்ப்பும் இல்லை. எனவே அனைத்து எம்எல்ஏ-க்களும் உடனடியாக தனது தொகுதிக்குச் சென்று மக்களின் கருத்துகளைக் கேட்க வேண்டும். மக்கள் யாரை ஆதரிக்க சொல்கிறார்களோ, அவரை ஆதரிக்க வேண்டும். அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏ-க்களில் பலர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக உள்ளனர்” என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
சினிமா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
வணிகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
க்ரைம்
6 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
க்ரைம்
6 hours ago
இந்தியா
6 hours ago
சினிமா
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago