சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நீதிபதி கர்ணன் கடிதம்- புகார் நகல் அளிக்க கோரிக்கை

By செய்திப்பிரிவு

தனக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகார்களின் நகல்களை தனக்கு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இது தொடர்பாக இம்மாதம் 17-ம் தேதி தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வாலுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: எனக்கு எதிராக பல நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் ஏராளமான புகார்களை அளித்துள்ளதாக நீங்கள் கூறியுள்ளீர்கள். இது தொடர்பாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

அந்தப் புகார்கள் தொடர்பாக தகுந்த விளக்கங்களை நான் அளிக்க வேண்டும். ஆகவே, அந்தப் புகார்களின் நகல்களை எனக்கு வழங்கிட வேண்டும். மேலும் அந்தப் புகார்களின் உண்மைத் தன்மை குறித்து அறிவதற்காக விரிவான விசாரணைக்கும் தாங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நீதிபதி கர்ணன் தனது கடிதத்தில் கோரியுள்ளார்.

தலைமை நீதிபதியின் கடிதம்

நீதிபதி கர்ணனை சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து வேறு உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யக்கோரி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால் எழுதிய கடிதம் தொடர்பான விவரங்கள் கடந்த வாரம் பத்திரிகைகளில் வெளியாகி இருந்தன.

தான் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றதில் இருந்து நீதிபதி கர்ணனுக்கு எதிராக சக நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் ஏராளமான புகார்களை அளித்து வருவதாக அந்தக் கடிதத்தில் தலைமை நீதிபதி அகர்வால் குறிப்பிட்டிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

21 mins ago

இந்தியா

32 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

16 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

49 mins ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்