பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்களில் தகுதி யானவர்கள் பதிவு செய்யப் படுவார்கள் என சட்டப் பேரவையில் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரி வித்தார்.
சட்டப்பேரவையில் நடந்த விவாத விவரம்:
நந்தகுமார் (திமுக):
ஆண்டு தோறும் செப்டம்பர், அக் டோபர் மாதங்களில் சாலைப் பணிகளுக்கான ஒப்பந்தம் கோரப்படும். ஆனால், கடந்த ஆண்டுக்கான ஒப் பந்தங்கள் இதுவரை கோரப் படவில்லை.
அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:
தற்போது ஒப்பந் தம் கோரப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் இறுதி செய்யப்படும். உறுப்பினர் ஒப்பந்ததாரர் என்பதால் இதை கேட்கிறார். ஒப்பந்த பணிகள் தொடங்கப்பட் டுள்ளன.
நந்தகுமார்:
பல பணி களுக்கான நிலுவைத் தொகைகள் இன்னும் வழங் கப்படவில்லை.
எடப்பாடி பழனிசாமி:
கடந்த ஆண்டு தாமதமாகத்தான் மானிய கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, அதன் பின்னரே நிதி ஒதுக்கப் பட்டது. விரைவில் ஒப் பந்ததார்களுக்கான தொகை வழங்கப்படும்.
நந்தகுமார்:
புதிய ஒப் பந்ததார்கள் பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி:
பணிக்கு ஒதுக்கப்படும் நிதிக்கு ஏற்ப ஒப்பந்ததாரர்கள் அழைக்கப்படுகின்றனர். அவர்கள் ஒவ்வொரு நிலையிலும் அதற்கான பணிகளை எடுத்து செய்து முடித்திருக்க வேண்டும். அதன் அடிப்படையில் தான் பதிவு செய்யப்படுகி்ன்ற னர்.
நந்தகுமார்:
படிப்படியாக ஒப்பந்ததார்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி:
எல்லோரும் ஒப்பந்ததாரர்கள் ஆகிவிட்டால், கட்டப் பஞ்சாயத்து நடக்கும் சூழல் உருவாகும். அதனால்தான் தகுதியானவர்களுக்கு பணி வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் நிச்சயமாக ஒப்பந்ததாரர்களாக பதிவு செய்ய அனுமதிக்கப்படு வார்கள்.
இவ்வாறு சட்டப் பேரவை யில் நேற்று விவாதம் நடந்தது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
வணிகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
10 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
க்ரைம்
5 hours ago