திண்டுக்கல் அருகே கொடைரோட்டில் பிரபல தனியார் சோப் உரிமையாளரின் வீடு, ஆலை மற்றும் அலுவலகங்களில் மதுரை வருமான வரித் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை செய்து முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.
திண்டுக்கல் அருகே உள்ள கொடைரோட்டைச் சேர்ந்தவர் தனபால். இவர் சோப் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். புதுச்சேரி, கொடைரோடு, சென்னை உள்பட இவருக்குச் சொந்தமான 19 இடங்களில் வருமானவரி அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை செய்தனர்.
தனபாலுக்கு அம்மைய நாயக்கனூரில் சோப் நிறுவனம் உள்ளது. கொடைரோட்டில் பங்களா மற்றம் அலுவலகம் உள்ளது. இந்த இடங்களில் மதுரை வருமான வரி அதிகாரிகள் 22 பேர் கொண்ட குழுவினர் வியாழக்கிழமை காலை 8 மணி முதல் மாலை வரை அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனை நடைபெற்ற இடங்களில் இருந்து ரொக்கம், முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக வருமான வரி தாக்கல் செய்யாதது, விற்பனை விவரங்கள் குறித்து சரியான தகவல்களை தெரிவிக்காமல் இருந்தது குறித்து வந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
36 mins ago
சினிமா
46 mins ago
உலகம்
55 mins ago
சினிமா
1 hour ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
கல்வி
1 hour ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
2 hours ago