திண்டுக்கல்: தனியார் சோப் நிறுவனத்தில் வருமான வரி சோதனை

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் அருகே கொடைரோட்டில் பிரபல தனியார் சோப் உரிமையாளரின் வீடு, ஆலை மற்றும் அலுவலகங்களில் மதுரை வருமான வரித் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை செய்து முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.

திண்டுக்கல் அருகே உள்ள கொடைரோட்டைச் சேர்ந்தவர் தனபால். இவர் சோப் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். புதுச்சேரி, கொடைரோடு, சென்னை உள்பட இவருக்குச் சொந்தமான 19 இடங்களில் வருமானவரி அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை செய்தனர்.

தனபாலுக்கு அம்மைய நாயக்கனூரில் சோப் நிறுவனம் உள்ளது. கொடைரோட்டில் பங்களா மற்றம் அலுவலகம் உள்ளது. இந்த இடங்களில் மதுரை வருமான வரி அதிகாரிகள் 22 பேர் கொண்ட குழுவினர் வியாழக்கிழமை காலை 8 மணி முதல் மாலை வரை அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனை நடைபெற்ற இடங்களில் இருந்து ரொக்கம், முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளாக வருமான வரி தாக்கல் செய்யாதது, விற்பனை விவரங்கள் குறித்து சரியான தகவல்களை தெரிவிக்காமல் இருந்தது குறித்து வந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

36 mins ago

சினிமா

46 mins ago

உலகம்

55 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

கல்வி

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

மேலும்