ஆம்னி பேருந்துகளில் கட்டணம் நிர்ணயிக்காத நிலையில் வழக்கத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதாக போக்குவரத்து ஆணையரகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இதன் அடிப்படையில் பொங்கல், தீபாவளி, ஆயுதபூஜை போன்ற பண்டிகை காலங்களில்தான் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆம்னி பேருந்துகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்துவார்கள்.
ஆனால், இந்தமுறை வட்டார போக்கு வரத்து அதிகாரி கே.பழனிசாமி மற்றும் வாகன ஆய்வாளர்கள் ஜெய்கணேஷ், ராஜாமணி, சரவணன், ஈஸ்வரன் ஆகியோர் கோயம்பேடு மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் கடந்த 2 நாட்களாக திடீரென ஆம்னி பேருந்துகளில் ஆய்வுப் பணி மேற்கொண்டனர்.
இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அதிகாரி கே.பழனிசாமி ‘தி இந்து’விடம் கூறியதாவது:
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல், பாதுகாப்பு குறைபாடு உள்ளிட்டவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்க போக்குவரத்து ஆணையரின் உத்தரவின்பேரில் நாங்கள் ஆய்வு நடத்தினோம். இதில், தமிழக அரசுக்கு சாலை வரி செலுத்தாதது, பர்மிட் இல்லாமல் ஓட்டியது, தகுதிச்சான்று இன்றி ஓட்டியது உள்ளிட்ட விதிமீறல்களுடன் இயக்கப்பட்டு வந்த 4 ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
உலகம்
11 hours ago
ஆன்மிகம்
11 hours ago