தமிழகத்தில் பருவமழை பொய்த்த நிலையில், கடந்த பிப்ரவரியில் பல்வேறு காய்கறிகளின் விலை உயரத் தொடங்கின. கிலோ ரூ.10-க்கு விற்கப்பட்ட தக்காளி ரூ.35 வரை உயர்ந்தது. இந்நிலையில் தற்போது தக்காளி, சாம்பார் வெங்காயம், வெண்டை, பாகற்காய், புடலை ஆகியவற்றின் விலை குறைந்துள்ளது. பீன்ஸ், கேரட், முள்ளங்கி ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக கோயம்பேடு மலர், காய், கனி அங்காடி வியாபாரிகள் நலச் சங்க நிர்வாகி சுகுமாரிடம் கேட்டபோது, ‘‘பீன்ஸ், கேரட்டை பொறுத்தவரை, கர்நாட கத்திலிருந்து அதிக அளவில் வருகிறது. கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்ததால், வரத்து குறைந்தது. அதனால் ரூ.35-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் ரூ.40-க்கும், ரூ.15-க்கு விற்கப்பட்ட கேரட், ரூ.22-க்கும் விற்கப்படுகிறது. முள்ளங்கி விலை ரூ.8-லிருந்து ரூ.12 ஆக உயர்ந்துள்ளது.
தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வறட்சியால் முருங் கைக்காய் வரத்து குறைந்து, அதன் விலை ரூ.13-லிருந்து ரூ.35 ஆக உயர்ந்துள்ளது. மேலும் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை ரூ.25 ஆகவும், சாம்பார் வெங்காயம் ரூ.40-லிருந்து 30 ஆகவும், வெண் டைக்காய் ரூ.45-லிருந்து ரூ.30 ஆகவும், பாகற்காய் ரூ.35-லிருந்து ரூ.30 ஆகவும், குறைந்துள்ளது. இது தற்காலிகமானதுதான். மார்ச் 25-ம் தேதிக்குள் அனைத்து காய்கறிகளின் விலையும் உயரத் தொடங்கும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
27 mins ago
விளையாட்டு
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
க்ரைம்
3 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
க்ரைம்
3 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
சுற்றுலா
5 hours ago