பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை வியாழக்கிழமை முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, அரசுத் தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், '' 2016 ஜுன், ஜுலை மாதம் நடைபெற உள்ள 12-ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு எழுத உள்ள அனைத்து தனித் தேர்வர்களும் (தட்கல் உட்பட) இன்று (16-ம் தேதி) முதல் வரும் 18-ம் தேதி வரை www.tngdc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வு கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை அடங்கிய பாடங்களில் செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறை தேர்வை மீண்டும் செய்வதோடு எழுத்துத் தேர்வும் எழுத வேண்டும். அதிகபட்ச மதிப்பெண் 200 கொண்ட செய்முறை மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் செய்முறைத் தேர்வை செய்ய வேண்டும்.
மொழிப் பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு மற்றும் சிறப்பு மொழி (தமிழ்) பாடத்தில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதும் தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும்''என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
விளையாட்டு
11 hours ago
சினிமா
12 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
13 hours ago