சென்ட்ரலில் பராமரிப்பு பணி: 1-வது நடைமேடையில் ரயில்கள் இயக்கப்படாது

By செய்திப்பிரிவு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத் தின் 1-வது நடைமேடையில் நாளை முதல் 31-ம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால், அந்த நடைமேடையில் இருந்து ரயில்கள் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 1-வது நடைமேடையில் 2-ம் தேதி (நாளை) முதல் 31-ம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. இதனால், பிட்ரகுண்டாவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வரவேண்டிய பயணிகள் ரயில் (57240) குண்மிடிப்பூண்டி வரை மட்டுமே இயக்கப்படும். இதேபோல, சென்னை சென்ட்ரலில் இருந்து கூடூர் செல்ல வேண்டிய பயணிகள் ரயில் (57239) கும்மிடிப்பூண்டியில் இருந்து இயக்கப்படும். மேற்கண்ட நாட்களில் 1-வது நடைமேடையில் இருந்து ரயில்கள் இயக்கப் படாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 mins ago

இந்தியா

37 mins ago

தமிழகம்

33 mins ago

இந்தியா

57 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

59 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

மேலும்