சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத் தின் 1-வது நடைமேடையில் நாளை முதல் 31-ம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால், அந்த நடைமேடையில் இருந்து ரயில்கள் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 1-வது நடைமேடையில் 2-ம் தேதி (நாளை) முதல் 31-ம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. இதனால், பிட்ரகுண்டாவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வரவேண்டிய பயணிகள் ரயில் (57240) குண்மிடிப்பூண்டி வரை மட்டுமே இயக்கப்படும். இதேபோல, சென்னை சென்ட்ரலில் இருந்து கூடூர் செல்ல வேண்டிய பயணிகள் ரயில் (57239) கும்மிடிப்பூண்டியில் இருந்து இயக்கப்படும். மேற்கண்ட நாட்களில் 1-வது நடைமேடையில் இருந்து ரயில்கள் இயக்கப் படாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 mins ago
இந்தியா
37 mins ago
தமிழகம்
33 mins ago
இந்தியா
57 mins ago
இந்தியா
44 mins ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
59 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
5 hours ago