குடும்பத் தகராறில் இளம் பெண் தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்

By செய்திப்பிரிவு

மாம்பாக்கம் கிராமம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் மனைவி மல்லிகா. இவர் தனது மகள் மஞ்சுவை திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை உடையார்கோவிலைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்து கொடுத்தார். இவர்களுக்கு ஒரு வயது பெண் குழந்தை உள்ளது.

திருமணம் ஆனதில் இருந்தே நகை தொடர்பாக தம்பதி இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 11-ம் தேதி இருவரிடையே சண்டை ஏற்பட்டதாக தாய் மல்லிகாவிடம் போன் மூலம் மஞ்சு கூறியுள்ளார். தாய் மல்லிகா, அவரை நேரில் சென்று சமாதானப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், நேற்று தனது வீட்டில் மஞ்சு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் பிரேத பரிசோத னைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோது, உடலில் காயங் கள் இந்ததாக தெரிகிறது. இதனால், மஞ்சு கொலை செய்யப்பட்டுள் ளதாகக் கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோட்டாட்சியரின் சமா தானத்தை ஏற்று மறியல் கைவிடப் பட்டது. புகாரின் பேரில் திருமழிசை போலீஸார் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

12 mins ago

இந்தியா

6 mins ago

தமிழகம்

23 mins ago

வாழ்வியல்

14 mins ago

இந்தியா

28 mins ago

தமிழகம்

49 mins ago

சினிமா

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்