ஜூலை 4-ம் தேதி அரசே நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: 40 வயது வரை உள்ளோர் பங்கேற்கலாம்

By செய்திப்பிரிவு

சென்னையில் ஜூலை 4-ம் தேதி தமிழக அரசு சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக வேலைவாய்ப்புத்துறை ஆணையர் ஜோதிநிர்மலாசாமி தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் வரும் ஜூலை 4 -ம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணி முதல் 2 மணி வரை கீழ்காணும் முகவரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

படித்த வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு தனியார்துறை மூலம்வேலைவாய்ப்பு ஏற்படுத்திட இம்முகாம் நடத்தப்படுகிறது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன.

பட்டயபடிப்பு, பட்டபடிப்பு, பட்டமேற்படிப்பு, செவிலியர் மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு. படித்துள்ள 21 வயது முதல் 40 வயது வரை உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

வேலை தேடுவோர் தங்கள் கல்விச்சான்றிதழ்கள் மற்றும் சுயவிவர குறிப்புடன்(RESUME) கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பதிவு அவசியமில்லை. இதற்கான பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது.

 

நடைபெறும் இடம்:

மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையம்,

A– 28, முதல் தளம், டான்சி கார்ப்பரேட் வளாகம்,

திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி,

சென்னை – 600 032.

மேலும் விவரங்களுக்கு மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி (044– 22500134) வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்’

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

விளையாட்டு

59 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

4 hours ago

மேலும்