தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
‘‘வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் மாலையில் லேசானை மழைக்கு வாய்ப்புள்ளது. ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
கடந்த 24 மணீநேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 5 செமீ, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது.
மத்திய மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் ஒடிசாவை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியில் நிலவியிருந்த ‘டயி’ புயல் தெற்கு ஒடிசா பகுதிகளில் வியாழக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு கரையை கடந்தது. ஒடிசா, சத்தீஸ்கர், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை இருக்கும். இந்த மாற்றத்தால் தமிழகத்தில் மழைப்க்குப் பெரிய அளவில் வாய்ப்பு இல்லை’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
5 mins ago
இந்தியா
13 mins ago
க்ரைம்
10 mins ago
இந்தியா
16 mins ago
தமிழகம்
38 mins ago
இந்தியா
45 mins ago
இந்தியா
57 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago