கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில், வீரப்பன் கூட்டாளிகள் 9 பேரை விடுதலை செய்து கோபி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த தொட்டகாஜனூரில், கன் னட நடிகர் ராஜ்குமாருக்கு பண்ணை வீடு உள்ளது. கடந்த 2000-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி, இந்த வீட்டில் ராஜ்குமார் தங்கியிருந்தபோது வீரப்பன் மற் றும் அவரது கூட்டாளிகளால் கடத்தப்பட்டார். இது தொடர்பாக தாளவாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு கோவை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து தமிழக - கர்நாடக அரசின் சார்பில் தூதுவர் அனுப்பப் பட்டு, வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இதன் தொடர்ச்சியாக 108 நாட்களுக்குப் பிறகு ராஜ்குமார் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் வீரப்பன், அவரு டைய நண்பர்கள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா, மல்லு, மாறன், கோவிந்தராஜ் என்கிற இனி யன், அன்றில் என்கிற ஏழுமலை, செல்வம் என்கிற சத்தியா, அமிர்த லிங்கம், பசுவண்ணா, நாகராஜ், புட்டுசாமி, கல்மண்டிராமா, ரமேஷ் ஆகிய 14 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா ஆகியோர் போலீ ஸாரால் கடந்த 2004-ம் ஆண்டு நடந்த என்கவுன்ட்டரில் கொல்லப் பட்டனர். மல்லு என்பவர் இறந்து விட்டார். ரமேஷ் என்பவர் தலைமறைவாக உள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை கோபி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இறந்தவர்கள் மற்றும் தலைமறைவாக உள்ள ரமேஷை தவிர மீதி உள்ள 9 பேரும் வழக்கின் விசாரணைக்கு கோபி நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர். அரசு தரப்பில் மொத்தம் 42 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். 52 ஆவணங்கள் மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட 31 பொருட்களை சிபிசிஐடி போலீஸார் நீதிமன்றத்தில் ஒப்படைத்திருந்தனர்.
இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளிலும் இந்திய படைக்கலன் சட்டப்படியும் வெடி பொருள் சட்டப் படியும் இந்த வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டது.
47 பேர் சாட்சியம்
கடத்தல் வழக்கு விசாரணையி ன்போது 47 பேர் சாட்சியம் அளித் துள்ளனர். 10 நீதிபதிகள் வழக்கை விசாரித்துள்ளனர். வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருந்த போதே நடிகர் ராஜ்குமார், அவரு டைய மனைவி பருவதம்மாள் ஆகியோர் இறந்து விட்டனர்.
18 ஆண்டுகள் மற்றும் 2 மாதங் களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி மணி நேற்று தீர்ப்பளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமார், அவரு டைய மனைவி பருவதம்மாள் ஆகியோர் விசாரிக்கப்படவில்லை. முதல் தகவல் அறிக்கை அரசு தரப்பில் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பல உண்மை கள் அரசு தரப்பில் நிரூபிக்கப் படவில்லை. ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட முறை சரியல்ல. குற்றவாளிகள் குறித்து அடை யாள அணிவகுப்பு நடத்தப்பட வில்லை.
அரசு தூதுவராகச் சென்ற நக்கீரன் கோபால், நெடுமாறன் உள்ளிட்ட பலரை போலீஸார் விசா ரிக்கவில்லை. தமிழக, கர்நாடக மாநில அரசுகள் வழக்குக்கான ஆதாரங்களை சமர்ப்பிப்பதில் அக்கறை காட்டவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் வீரப்ப னுக்கும் எந்தவிதமான தொடர்பு என்பதை நிரூபிக்க எந்த ஆதா ரத்தையும் குறிப்பிடவில்லை. எனவே வழக்கில் குற்றம்சாட்டப் பட்டுள்ள 9 பேரையும் விடுதலை செய்கிறேன். இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி தெரிவித்தார்.
இந்த வழக்கில் அரசு தரப் பில் வக்கீல் தனகோட்டிராம் வாதாடி னார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர் பாப்பா மோகன் ஆஜரானார். வழக்கில் சம்பந்தப்பட்ட மாறன், கோவிந்த ராஜ், அன்றில், செல்வம், அமிர்த லிங்கம், பசுவண்ணா, நாகராஜ், கல்மண்டிராமா ஆகிய 8 பேர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரா கினர். புட்டுசாமி மட்டும் ஆஜராக வில்லை.
முக்கிய செய்திகள்
இந்தியா
23 mins ago
விளையாட்டு
18 mins ago
இணைப்பிதழ்கள்
44 mins ago
தமிழகம்
54 mins ago
இணைப்பிதழ்கள்
1 hour ago
இணைப்பிதழ்கள்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
தமிழகம்
2 hours ago