சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற உயர்கல்வித் துறை அமைச் சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள 509 பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஒரே தேர்வு முறையை நடைமுறைப்படுத்தி வருகிறது.
இதேபோல், அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே தேர்வு முறையை கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கையைப் போன்று கலை அறிவியல் படிப்புக்கும் ஒற்றைச் சாளர முறை நடைமுறைப்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும். அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய தேர்வு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
முக்கிய செய்திகள்
சினிமா
11 mins ago
சினிமா
18 mins ago
கல்வி
13 mins ago
இந்தியா
41 mins ago
கருத்துப் பேழை
51 mins ago
தமிழகம்
28 mins ago
தொழில்நுட்பம்
34 mins ago
கருத்துப் பேழை
57 mins ago
கருத்துப் பேழை
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
உலகம்
1 hour ago