சென்னையை அடுத்த குன்றத்தூரில் பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து குழந்தைகளை கொலை செய்த தாய் கைது: ஆண் நண்பரையும் கைது செய்த போலீஸார்

By செய்திப்பிரிவு

சென்னையை அடுத்த குன்றத் தூரில் 2 குழந்தைகளை கொலை செய்த தாய் மற்றும் அவரது ஆண் நண்பரை போலீஸார் கைது செய்தனர்.

குன்றத்தூர் அருகே மூன்றாம் கட்டளை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் விஜய். வங்கியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அபிராமி (25). இவர் களுக்கு அஜய் (7) என்ற மகனும் கார்னிகா (4) என்ற மகளும் உள்ள னர். வீட்டின் அருகே பிரியாணி கடை ஊழியர் சுந்தரம் என்பவருடன் அபிராமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து வாழ கணவர் மற்றும் குழந்தைகள் இடையூறாக இருப்பதாக நினைத்தனர். இதையடுத்து பாலில் தூக்க மாத்திரை கலந்து குழந்தைகளை அபிராமி கொலை செய்தார். இதில் கணவர் அதிஷ்டவசமாக தப்பினார். இந்த சம்பவம் தொடர்பாக குன்றத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த அபிராமியை தேடி வந்தனர்.

இதனிடையே அபிராமியின் ஆண் நண்பர் சுந்தரத்தை கைது செய்து விசாரித்தனர். பின்னர் அவரையும் அடையாளம் காட்டு வதற்காக அபிராமியின் தம்பியை யும் அழைத்துக் கொண்டு தனிப்படை போலீஸார் நாகர் கோவில் சென்றனர். அங்கிருந்த படியே திருவனந்தபுரத்தில் மறைந் திருந்த அபிராமியை வரவழைத்து கைது செய்தனர்.

இந்த கொலை சம்பந்தமாக போலீஸார் கூறியதாவது: அபிராமி, விஜய் இருவரும் காதலித்து 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். வீட்டின் அருகே பிரியாணி கடைக்கு செல் லும்போது அங்கு வேலை பார்க்கும் சுந்தரத்துடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த விவகாரம் கணவர் மற்றும் பெற்றோருக்கு தெரியவர, அபிராமியை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அபிராமியும் சுந்தரமும் கணவர் மற்றும் குழந்தைகளை கொல்ல திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து சுந்தரத்தின் ஆலோசனையின்பேரில் கணவர் மற்றும் 2 குழந்தைகளுக்கு கடந்த 30-ம் தேதி இரவு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார். ஆனால், காலையில் கணவரும் மகனும் எழுந்துவிட்டனர். மகள் கார்னிகா இறந்துவிட்டார்.

இதை அறியாத விஜய், வேலைக்குச் செல்லும் முன்பு மகளுக்கு முத்தம் கொடுக்கச் சென்றார். அப்போது, ‘‘குழந்தை அசதியாய் தூங்குகிறாள் நீங்கள் எழுப்பி விட்டால் என்னால் வீட்டு வேலை செய்ய முடியாது" என்று கூறி அபிராமி தடுத்து விட்டார். இதனால் வேலைக்குச் செல்லும் அவசரத்தில் விஜய் சென்று விட்டார். இதையடுத்து தனது மகனை கொல்ல மீண்டும் பாலில் மாத்திரையை கலந்து கொடுத்து படுக்க வைத்துள்ளார். பின்னர் மீண்டும் பிழைத்து விடுவானோ என்ற பயத்தில் மகனின் வாயை பொத்தி கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் தாலியை அடகு வைத்து கோயம்பேட்டில் இருந்து பேருந்தில் திருவனந்தபுரம் சென்று விட்டார். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அபிராமி, சுந்தரம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

இந்தியா

22 mins ago

சினிமா

23 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சுற்றுலா

2 hours ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்