முதலில் திருப்பரங்குன்றத்தில் போட்டியிட்டு டெபாஸிட் வாங்குங்கள்: அமைச்சர் விஜயபாஸ்கருக்கு டிடிவி தினகரன் பதில் சவால்

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டையில் என்னுடன் போட்டியிட்டு மோதத்தயாரா? என அமைச்சர் விஜயபாஸ்கர் சவால் விட முதலில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் வாங்குங்கள் பிறகு சவால் விடலாம் என டிடிவி பதில் சவால் விட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. அதிமுக, திமுக- அதிமுக, டிடிவி என மோதல் கடுமையாக உள்ளது. இலங்கைப்பிரச்சினையில் திமுக காங்கிரஸை கண்டிக்கிறேன் என அதிமுக நடத்திய ஆர்ப்பாட்டக் கூட்டங்களில் டிடிவியை சகட்டுமேனிக்கு திட்டத் துவங்கியுள்ளனர்.

இதில் புதுக்கோட்டையில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் டிடிவி தினகரனுக்கு நெஞ்சிலே துணிவிருந்தால் புதுக்கோட்டை தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிட்டு வெல்லட்டும் என்று சவால் விட்டார்.

இதற்கு பதிலளித்து பதில் சவால் விட்டுள்ளார் டிடிவி தினகரன்.

அவரது பேட்டி வருமாறு:

நாகை மாவட்டம் திருவாரூரில் அரசியல் பயணம் மேற்கொண்டுள்ள அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தற்போதைய ஆட்சியாளர்கள் எங்கள் மீது சேற்றை வாரி இறைத்தாலும், அது சந்தனமாகவே எங்கள் மீது வந்து விழும். செல்வாக்கு குறித்து பேசுகிறார்கள், இடைத்தேர்தல் வந்தால்தான் தமிழ்நாட்டில் யாருக்கு உண்மையாக செல்வாக்கு உள்ளது என்பது தெரியவரும்.

தனது அமுமுக திமுக, பாஜக தவிர்த்து மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் என்று தெரிவித்தார்,

விஜயபாஸ்கர் சவால் குறித்து பதிலளித்த அவர், “தன்னை போட்டிக்கு அழைப்பவர்கள் திருவாரூரில் வந்து நின்று வெற்றிப்பெறட்டும். விஜயபாஸ்கர் ஆசைபட்டால் திருப்பரங்குன்றத்தில் போட்டியிட்டு முதலில் டெபாசிட் வாங்கட்டும், பிறகு சவால் விடலாம் என்று தினகரன் பதில் சவால் விடுத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

28 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்