சட்டக் கல்லூரிகளில் தகுதியில்லாத ஆசிரியர்களை நீக்குவதற்கு எடுத்த நடவடிக்கைகள் என்ன?- பல்கலை துணைவேந்தருக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

By செய்திப்பிரிவு

சட்டக் கல்லூரிகள், சட்டப் பல் கலைக்கழகத்தில் தகுதியில்லாத ஆசிரியர்களை களைவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வரும் 29-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சட்டப் பல்கலைக்கழக துணை வேந்தருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் பதிவாள ராக தன்னை மீண்டும் நியமிக்க உத்தரவிடக் கோரி சங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசா ரித்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிர மணியம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு வருமாறு:

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர், பேராசிரியர், துறை தலைவர் மற்றும் முதல்வருக்கு பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்துள்ள கல்வித்தகுதி என்ன? தற்போது பணிபுரியும் ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்களை சரிபார்க்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? ஆகியன குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

25-ல் விவரம் தாக்கல்

சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் சட்ட கல்லூரிகளில் அனுமதிக்கப் பட்ட ஆசிரியர் பணியிடங்கள் எத்தனை? தற்போது பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்கள், பேராசிரியர் கள், கவுரவ விரிவுரையாளர்கள் பற்றிய விவரம், எந்த அடிப் படையில் அவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் என்பது குறித்த விவரங்களை வரும் 25-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டார். தற்போது பணிபுரியும் ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்களை சரிபார்க்க எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

7 mins ago

தமிழகம்

49 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்