தமிழகத்தில் நிலவும் கடுமையான தண்ணீர்ப் பஞ்சத்துக்கு காரணம் அதிமுக அரசுதான் என்றும் தண்ணீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் திமுகவின் துரைமுருகன், கனிமொழி ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக குடியாத்தத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் திமுக பொருளாளர் துரைமுருகன். அப்போது அவர் கூறும்போது, ''தமிழகத்தில் நிலவும் கடுமையான தண்ணீர்ப் பஞ்சத்துக்கு முழு, முதல் காரணம் ஆளும் அதிமுக அரசுதான். ஜெயலலிதா ஆண்ட 5 ஆண்டு காலம், இப்போது 3 வருடங்கள் என கிட்டத்தட்ட 8 ஆண்டுகளில் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட குடிநீருக்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை'' என்றார் துரைமுருகன்.
இதேபோல தூத்துக்குடியில் திமுக எம்.பி. கனிமொழி கூறும்போது, ''எல்லா இடங்களிலும் இந்த தண்ணீர்ப் பிரச்சினை இருக்கிறது. இதற்கு நிரந்தரத் தீர்வு காண அரசாங்கம் எதையுமே செய்யவில்லை.
திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்கள், பாதியில் முடிக்கப்படாமல் இடையில் நிறுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல பராமரிப்பு இல்லாமல் கிடப்பிலும் போடப்பட்டிருக்கிறது. அந்தத் திட்டங்களை நிறைவேற்றத் தொடங்கினாலே, நாம் பல்வேறு இடங்களில் தண்ணீர்ப் பிரச்சினையைப் பெரிய அளவில் குறைக்க முடியும்'' என்றார் கனிமொழி.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
சினிமா
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
சினிமா
8 hours ago
இந்தியா
9 hours ago