தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு அவகாசம் கோரி சிபிஐ தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை நாளைக்கு (வியாழக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பேரணி நடத்தியவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் 2018 ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது. அப்போது விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இருப்பினும் விசாரணை இன்னும் முடியவில்லை.
இந்நிலையில் துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கால நீட்டிப்பு வழங்கக்கோரி சிபிஐ இயக்குநர் சார்பில் டிஎஸ்பி ரவி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், உயர் நீதிமன்ற உத்தரவுபடி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்புடைய 222 வழக்குகளையும் ஒரே வழக்காக பதிவு செய்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ 2018 அக்டோபர் 8-ல் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.
இதுவரை வழக்கு தொடர்பாக 160 ஆவணங்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு, அதில் நூறு ஆவணங்களுக்கு பதில் பெறப்பட்டுள்ளது. 300 பேரிடம் விசாரித்துள்ளோம். மொத்தம் 316 ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு நாளில் நடைபெற்ற நிகழ்வுகள், அவற்றிற்கான காரணங்கள், அனுமதி பெறாமல் கூடியது ஏன்? அவர்கள் ஆயுதங்கள் வைத்திருந்தனரா? போராட்டத்தின் மையப்பொருள் என்ன? என்பது தொடர்பாக விசாரிக்க வேண்டியதுள்ளது.
இவற்றை விசாரித்து முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு அவகாசம் தேவைப்படுகிறது. இதனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட கால அவகாசத்தை ஜூன் 30 வரை நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. சிபிஐ வழக்கறிஞர் ஆஜராகாததால் விசாரணையை நாளைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
க்ரைம்
35 mins ago
தமிழகம்
39 mins ago
இந்தியா
20 mins ago
தமிழகம்
59 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
இணைப்பிதழ்கள்
9 hours ago