வாட்ஸ் அப் குழுவிலும் மோதிக்கொள்ளும் கிரண்பேடி - நாராயணசாமி

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநரும் முதல்வரும் நேருக்கு நேர் மோதி கொள்வது போல் வாட்ஸ் அப் குழுவிலும் மோதிக்கொள்கிறார்கள்.

"யாருக்கு அதிகாரம்" என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் முதல்வர் நாராயணசாமியும் மோதி கொள்ளும் விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது. ஆளுநர் நிகழ்வுகளை முதல்வர் தவிர்த்து வரும் சூழ்நிலையில் வில்லியனூரில்  சோழ  திருக்காமேஸ்வரர் கோயில் தேர் திருவிழாவில் மரபுபடி தேரோட்டத்தை துணைநிலை ஆளுநரும் முதல்வரும் துவக்கி வைப்பது வழக்கம். இதனை தவிர்க்க முடியாமல் இருவரும் பாராமுகமாக தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.

இதன் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை ஊடகங்களுக்கு அனுப்பும் முதல்வர் வாட்ஸ் அப் குழுவில் கிரண்பேடியின் படம் மற்றும் பெயர் குறிப்பிடவில்லை. இதே போல் ஆளுநரின் குழுவில் முதல்வரின் பெயர், படம் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்