இஸ்ரேலில் செயல்படுத்தப்படும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் போல தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
பாஜக செயல் தலைவராக ஜெ.பி. நட்டா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று பிற்பகல் பதவியேற்கவுள்ளார். இதில் பாஜக மாநில தலைவர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர். இதற்காக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். அப்போது விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததாவது:
பாஜக செயல் தலைவராக ஜெ.பி. நட்டா பதவியேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நானும் செல்கிறேன். அவருக்கு வாழ்த்து சொல்லவும், அவருடைய வழிகாட்டுதல்படி நடப்போம்.
தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை நிச்சயமாக தீர்க்கப்பட வேண்டிய ஒன்று. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் இதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கடல்நீரை குடிநீராக்கும் நடமாடும் நிலையத்தை இஸ்ரேல் சென்று பார்த்து அதனை இங்கேயும் கொண்டு வர வேண்டும். திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தண்ணீர் பிரச்சினை பற்றி பேச தார்மீக உரிமை இல்லை.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
23 mins ago
இந்தியா
27 mins ago
இந்தியா
36 mins ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
உலகம்
2 hours ago
வணிகம்
2 hours ago
சினிமா
3 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago