காஞ்சிபுரத்தில் அதிமுக தொண்டர் தற்கொலையால் பரபரப்பு

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் அருகேயுள்ள குருவிமலையில் அதிமுக தொண்டர் ஒருவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக குருவிமலை கிளையின் உதவிச் செயலராக பொறுப்பேற்றிருந்த பாபு (45), இவர், தனது வீட்டருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் மரத்தில் தூக்கில் தொங்கியதை ஊர்க்காரர்கள் சிலர் பார்த்து அவரது வீட்டினருக்கும் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.

நேற்று சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து மனமுடைந்த நிலையில் அவர் இருந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவருக்கு 2 மனைவிகள் மற்றும் 4 குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரத்தில் நேற்று வன்முறை வெடித்ததில் பேருந்து ஒன்று கொளுத்தப்பட்டது. இன்று காலை முதல் சாலைகள் வெறுச்சோடி காணப்படுவதால் பந்து போன்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

உலகம்

18 mins ago

தமிழகம்

27 mins ago

இந்தியா

34 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

56 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்