சென்னை கடற்கரை - கொருக்குப்பேட்டை இடையே 3, 4வது ரயில்பாதையில் 31-ம் தேதியும் (நாளை) ஏப்ரல் 1-ம் தேதியும் பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால், ரயில்சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சூலூர்பேட்டையில் இருந்து 31-ம் தேதி இரவு 7.55 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பதிலாக சென்னை கடற்கரைக்கு மாற்றிவிடப்படும். கும்மிடிப்பூண்டியில் இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் சென்னை கடற்கரைக்கு செல்வதற்கு பதிலாக சென்ட்ரல் மின்சார ரயில் நிலையத்துக்கு மாற்றிவிடப்படும். வேளச்சேரியில் இருந்து ஆவடிக்கு இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு செல்லும் மின்சார ரயில் சென்னை கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும்.
சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணத்துக்கு நள்ளிரவு 1.20 மணிக்கு புறப்பட்டு செல்லும் மின்சார ரயில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
இதேபோல், ஆவடியில் இருந்து 8.45, பட்டாபிராமில் இருந்து காலை 8.40 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் சென்னை கடற்கரைக்கு செல்வதற்கு பதிலாக சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு செல்லும்.
சென்னை கடற்கரையில் இருந்து பொன்னேரிக்கு அதிகாலை 5.30 மணி, திருவள்ளூருக்கு அதிகாலை 5.30, காலை 6.15, 9.50 அரக்கோணத்துக்கு அதிகாலை 4.20, ஆவடிக்கு காலை 8.30, காலை 10.30 மணிக்கு செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. பொன்னேரி - சென்னை கடற்கரைக்கு காலை 7, ஆவடி - சென்னை கடற்கரைக்கு அதிகாலை 4.10, 4.25, காலை 6.05, 7.10 மற்றும் 7.40 மணிக்கு புறப்பட்டு செல்லும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.
மேலும், சென்னை கடற்கரை - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் காலை 9.10 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில் ஆவடியில் இருந்து இயக்கப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
சினிமா
4 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
சினிமா
9 hours ago
இந்தியா
10 hours ago