பெண்களை கிண்டல் செய்ததைத் தட்டிக் கேட்ட கவுன்சிலர் மீது தாக்குதல் நடத்திய இளைஞரை போலீஸார் கைது செய்தனர். அவரது நண்பர்கள் 3 பேரை தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக் கோட்டை அருகே உள்ள ஆலங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் கவுன்சிலராக உள்ளார். பால் ரெட்டிக் கண்டிகையைச் சேர்ந்த ரூபநாதன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் நேற்று ஆலங்காடு கிராம எல்லையில் நின்றுகொண்டு, அவ்வழியே செல்லும் பெண்களை கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்ட மூர்த்தி அவர்களை கண்டித்துள்| ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து வீட்டில் இருந்த மூர்த்தியை, ரூபநாதன் மற்றும் அவரது நண்பர்கள் உருட்டுக் கட்டையால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த மூர்த்தி திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஊத்துக்கோட்டை போலீஸார் ரூபநாதனை கைது செய்ததோடு, அவரது நண்பர்கள் 3 பேரை தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
5 hours ago
சினிமா
7 hours ago
விளையாட்டு
8 hours ago
வணிகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
க்ரைம்
9 hours ago
சுற்றுச்சூழல்
10 hours ago
க்ரைம்
10 hours ago
இந்தியா
10 hours ago