மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது, "சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே" என சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மீது அரவக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு கமல்ஹாசன் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த வாரம், நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. கமலுக்கு முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து புகார்தாரர் ராமகிருஷ்ணன் உட்பட 3 பேர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
விசாரணையின்போது கமல் தரப்பில், கமல் பேச்சால் எந்த இடத்திலும் அசம்பாவிதங்கள் நடைபெறவில்லை. காந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்சே பற்றிதான் கமல் பேசினார். ஒட்டுமொத்த இந்துக்கள் குறித்து அவர் பேசவில்லை. இந்த வழக்கால் கமலின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பில், பள்ளப்பட்டியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் கமல்ஹாசன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதில் உள்நோக்கம் உள்ளது. இந்தவழக்கு தொடர்பாக கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வேண்டி உள்ளது. கமலுக்கு எதிராக இதுவரை 76 புகார்கள் வந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதி, தேர்தல் முடியும் வரை (மே 19) சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேச வேண்டாம் எனக் கமல்ஹாசனுக்கு அறிவுரை கூறுமாறு கமல் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரிடம் கேட்டுக்கொண்டார். கமல் முன்ஜாமீன் மனு மீது மே 20-ல் தீர்ப்புஅளிக்கப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்தது.
இந்நிலையில் இந்த வழக்கை இன்று (திங்கள்கிழமை) விசாரித்த நீதிபதி புகழேந்தி, கமல்ஹாசனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். வரும் 15 நாட்களுக்குள் அரவக்குறிச்சி 4-வது நீதித்துறை நடுவர் மன்றம் முன்பு ஆஜராகி உரிய உத்தரவாத பத்திரங்களை வழங்கி ஜாமீன் பெற வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
க்ரைம்
1 hour ago
உலகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
வேலை வாய்ப்பு
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
கல்வி
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
வாழ்வியல்
4 hours ago