திண்டிவனத்தில் வீட்டில் இயங்கிய ஏசி வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்தனர்.
திண்டிவனத்திலுள்ள காவேரிப்பாக்கத்தில் வசிப்பவர் ராஜி (60). இவர் அதே பகுதியில் வெல்டிங் கடை வைத்துள்ளார். இவர் தன் மனைவி கலைச்செல்வி (55), மகன்கள் கோவர்தன் (35), கவுதம் (26), மருமகள் காயத்ரி ஆகியோருடன் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு கோவர்தனும், அவரது மனைவி காயத்ரியும் ஒரு அறையிலும், ராஜி, கலைச்செல்வி, கவுதம் ஆகியோர் தனி அறையிலும் தூங்கச் சென்றனர். நேற்று அதிகாலை 3.30 மணிக்கு ராஜி தூங்கிக்கொண்டிருந்த அறையில் இயங்கிய ஸ்பிளிட் ஏசி வெடித்து தீப்பிடித்தது.
அப்போது வெளியான வாயுவால் மூச்சுத் திணறி ராஜி, கலைச்செல்வி, கவுதம் ஆகியோர் மயக்கமாகினர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் மயக்க நிலையிலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து கோவர்தன் கொடுத்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். உயிரிழந்த கவுதமுக்கு வருகின்ற ஜூன் 6-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது குறிப்பிடதக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
விளையாட்டு
5 hours ago
க்ரைம்
5 hours ago
உலகம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
வேலை வாய்ப்பு
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
கல்வி
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago