திருவனந்தபுரம்-சென்னை சென்ட்ரல் இடையே வரும் 8-ம் தேதி பிரீமியம் ரயில் இயக்கப்படுகிறது. இதேபோல், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் 5-ம் தேதி ஐதராபாத்-கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு செவ்வாய்க்கிழமை (செப். 2) தொடங்குகிறது.
திருவனந்தபுரம்-சென்னை சென்ட்ரல் இடையே வரும் 8-ம் தேதி சிறப்பு ரயில் (வண்டி எண்.00648) இயக்கப்படுவதாக இருந்தது. அந்த ரயில் ரத்து செய்யப்பட்டு, அதே தினத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு (வண்டி எண்.00601) பிரீமியம் சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து 8-ம் தேதி மதியம் 2 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயில் கொல்லம், எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் பாலக்காடு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதேபோல், ஓணம் பண்டி கையை முன்னிட்டு, ஐதராபாத்-கொச்சுவேலி இடையே (வண்டி எண்.07115) வரும் 5-ம் தேதி சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், ஐதராபாதில் இருந்து மதியம் 3.55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.17 மணிக்கு காட்பாடி வந்தடைந்து, அன்று நள்ளிரவு 12.20 மணிக்கு கொச்சுவேலியை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், இந்த ரயில் (வண்டி எண்.07116) 7-ம் தேதி கொச்சுவேலியில் இருந்து இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் 8-ம் தேதி காலை 11 மணிக்கு காட்பாடி வந்தடைந்து, 9-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஐதராபாதை சென்றடையும்.
இந்த ரயில் செகந்திராபாத், காசிப்பேட், வாரங்கல், கம்மம், விஜயவாடா, ஓங்கோல், நெல்லூர், கூடூர், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கோவை, பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம், கோட்டயம், திருவல்லா, செங்க னூர், மாவேலிக்கரா, காயங்குளம் மற்றும் கொல்லம் ஆகிய ஊர்களில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு செவ்வாய்க்கிழமை (செப். 2) தொடங்குகிறது.
இத்தகவல், தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
விளையாட்டு
11 hours ago
சினிமா
12 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
13 hours ago