கண்ணுக்கு தெரியாத காற்றை விற்று காசு பார்த்தவர் ஆ.ராசா: முதல்வர் பழனிசாமி கடும் விமர்சனம்

By ஆர்.டி.சிவசங்கர்

கண்ணுக்கு தெரியாத காற்றை விற்று காசு பார்த்தவர் ஆ.ராசா என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் குன்னூரில் இன்று (திங்கள்கிழமை) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "நீலகிரி மாவட்டம், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொந்த மாவட்டம். ஜெயலலிதா இருக்கும் போது நீலகிரிக்கு என்ன திட்டங்கள் செய்தாரோ அதே போல தொடர்ந்து திட்டங்கள் செயல்படுத்தப்படும்" என தெரிவித்தார்.

மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்டப்பஞ்சாயத்து தலைவராக செயல்படுகிறார் என்றும், கண்ணுக்கு தெரியாத காற்றிலேயே காசு பார்க்க கூடிய வேட்பாளர் ஆ.ராசா எனவும் விமர்சித்தார். 2ஜி விவகாரத்தை மறைமுகமாக குறிப்பிட்டு முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

உலகம்

7 hours ago

ஆன்மிகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்