மதுராந்தகம் அடுத்த கே.கே.பூதூர் வாக்குச் சாவடியில் இதுவரையிலும் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. மருத்துவ கழிவுகளை எரிக்கும் தொழிற்சாலையை உடனடியாக மூட வேண்டும் என்றுகூறி 17-வது நாட்களாகப் போராடி வரும் கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி எண் 34, கே .கே.புதூர் கிராமத்தில் 943 ஓட்டுகள் உள்ளன. இதில் இதுவரை (காலை 11.45 நிலவரப்படி) ஒரு வாக்கு கூடப் பதிவாகவில்லை. மக்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.
இந்த கிராமத்தில் உள்ள மருத்துவக் கழிவுகளை எரிக்கும் ஆலை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக கூறி கிராம மக்கள் கடந்த ஒரு மாத காலமாக இந்த ஆலையை மூடுவதற்கு பல விதப் போராட்டங்களை நடத்தினர். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். அதிகாரிகள் எழுத்துப் பூர்வமாக உத்தரவாதம் தந்தால் வாக்களிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி வருகை தந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், கிராம மக்கள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே வாக்குச் சாவடியில் உள்ள இருசமநல்லூருக்கான வாக்குப்பதிவில் இதுவரை 18 வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்து.
முக்கிய செய்திகள்
தமிழகம்
28 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
தமிழகம்
1 hour ago