குஷ்பு கவனமாக இருக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் அறிவுரை

By செய்திப்பிரிவு

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு கவனமாக இருக்க வேண்டும் என்று பாஜக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவுரை கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான ரிஷ்வான் ஹர்சத்தை ஆதரித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு அண்மையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தைத் தாண்டி குஷ்பு நடந்து கொண்டிருந்த போது, ஒருவர் தகாத முறையில் கை வைத்திருப்பதாகத் தெரிகிறது. உடனடியாக சம்பந்தப்பட்ட நபரைக் கன்னத்தில் அறைந்தார் குஷ்பு. இந்த சம்பவம் வைரலானது.

இதற்கிடையே இதுகுறித்துப் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ''காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. அதனால் குஷ்பு கொஞ்சம் கவனமாக இருந்து கொள்வது நல்லது.

ராகுல்காந்தி தமிழகம் வந்து பிரச்சாரம் செய்துள்ளார். ராகுல் இங்கு வராமல் இருப்பது நல்லது. தமிழன் தமிழ்நாட்டை ஆளுவான். தமிழ்நாட்டை ஆளும் முதல்வர் பழனிசாமி தமிழர்தானே! அவர் தமிழனா, வேறு ஆளா?'' என்று கேள்வி எழுப்பினார் பொன்.ராதாகிருஷ்ணன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

50 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்