பொறியியல் படிப்புக்கு மே 3 முதல் விண்ணப்பம்:அண்ணா பல்கலைக்கழகம்

By செய்திப்பிரிவு

பொறியியல் படிப்புக்கு மே 3-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

570 பொறியியல் கல்லூரிகள்

தமிழ்நாட்டில் 570 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக துறைசார் கல்லூரிகள் ஆகியவற்றில் உள்ள பி.இ., பி.டெக். இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என சுமார் 2 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் (சிங்கில் விண்டோ சிஸ்டம்) மூலம் நிரப்பப்படும்.

இதற்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும். இதற்காக துணை வேந்தர் எம்.ராஜாராம் தலை மையில் ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில், பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் மே முதல் வாரத்தில் வழங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

மே 3 முதல் விண்ணப்பம்

இந்த நிலையில் பொறியியல் மாணவர் சேர்க்கை அறிவிப்பு தேதி, விண்ணப்பம் வழங்கப் படும் நாள், கடைசி தேதி உள்ளிட்ட விவரங்களை அண்ணா பல் கலைக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்டது.

இது தொடர்பாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் கூறிய தாவது:

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை பற்றிய அறிவிப்பு நாளிதழ்களில் மே 2-ம் தேதி வெளியிடப்படும். விண்ணப்ப படிவங்கள் மே 3-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 20-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

கலந்தாய்வு எப்போது?

விண்ணப்பதாரர்களுக்கு ரேண்டம் எண் வழங்கும் நாள், ரேங்க் பட்டியல் வெளியிடும் நாள், கலந்தாய்வு தொடங்கும் தேதி ஆகியவை பின்னர் வெளியிடப்படும்.

இவ்வாறு ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

12 mins ago

இந்தியா

32 mins ago

தமிழகம்

55 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்