பிப்.13 முதல் 22-ம் தேதிக்குள் பிளஸ் 1 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு

By செய்திப்பிரிவு

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்த ராதேவி அனுப்பியுள்ள சுற்றறிக் கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எழுத்துத் தேர்வுக்கு முன்பாக செய்முறைத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணையில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும்.

பிளஸ் 1 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்வதற்கான வெற்று மதிப்பெண் பட்டியலை பள்ளித் தலைமை ஆசிரியர்களும், முதன்மைக் கண்காணிப்பாளர் களும் பிப்ரவரி 1 முதல் 9-ம் தேதி வரை அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில், தங்களுக்கு வழங்கப்பட்ட யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். புதிய பாடத் திட்டத்தின்படி, பிளஸ் 2 செய்முறைத் தேர்வுக்கான வழிமுறைகளையே பின்பற்றி செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 13 முதல் 22-ம் தேதி வரையிலான நாட்களில் கண் டிப்பாக நடத்த வேண்டும். உரிய ஆவணங்களுடன் செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண் பட்டி யலை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகத்தில் பிப்ரவரி 23-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

முதன்மைக் கல்வி அலுவலர்கள் பிப்ரவரி 18 முதல் 23-ம் தேதி வரை செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதோடு மதிப்பெண் பட்டியலை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் பிப்ரவரி 26-ம் தேதி ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

சினிமா

8 mins ago

வலைஞர் பக்கம்

12 mins ago

சினிமா

17 mins ago

சினிமா

22 mins ago

இந்தியா

30 mins ago

க்ரைம்

27 mins ago

இந்தியா

33 mins ago

தமிழகம்

55 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்