வடகிழக்குப் பருவ மழை இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''தமிழகம், புதுவை, கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திரம், ராயலசீமா, உள் கர்நாடகா ஆகிய பகுதிகளில் இன்றுடன் வடகிழக்குப் பருவ மழை முடிவடைகிறது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 20 டிகிரி செல்சியஸாக இருக்கும். உள்மாவட்டங்களில் 15 - 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும்
தமிழத்தின் உள்பகுதிகளில் மூடுபனி பொழியும். நீலகிரியின் மலைப் பகுதிகளில் உறைபனி நிலவும். குறிப்பாக நீலகிரியில் 5 டிகிரி செல்சியஸுக்கும் குறைவான வெப்பநிலை இருக்கும்'' என்றார் புவியரசன்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
க்ரைம்
28 mins ago
தமிழகம்
32 mins ago
இந்தியா
13 mins ago
தமிழகம்
52 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
இணைப்பிதழ்கள்
9 hours ago