முடிவுக்கு வந்த வடகிழக்குப் பருவ மழை: வானிலை மையம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

வடகிழக்குப் பருவ மழை இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''தமிழகம், புதுவை, கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திரம், ராயலசீமா, உள் கர்நாடகா ஆகிய பகுதிகளில் இன்றுடன் வடகிழக்குப் பருவ மழை முடிவடைகிறது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 20 டிகிரி செல்சியஸாக இருக்கும். உள்மாவட்டங்களில் 15 - 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும்

தமிழத்தின் உள்பகுதிகளில் மூடுபனி பொழியும். நீலகிரியின் மலைப் பகுதிகளில் உறைபனி நிலவும். குறிப்பாக நீலகிரியில் 5 டிகிரி செல்சியஸுக்கும் குறைவான வெப்பநிலை இருக்கும்'' என்றார் புவியரசன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

க்ரைம்

28 mins ago

தமிழகம்

32 mins ago

இந்தியா

13 mins ago

தமிழகம்

52 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

மேலும்