பயிர்களை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தும் அமெரிக்கன் புழுக்களை அழிக்க `ரெடுவிட்’ பூச்சிகள் தயார்: தமிழகத்தில் முதன்முறையாக விருதுநகரில் உற்பத்தி

By இ.மணிகண்டன்

மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களைத் தாக்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் அமெரிக்கன் படைப்புழுக்களை அழிக்கும் `ரெடுவிட்' (Reduvid) பூச்சிகள் விருதுநகரில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 6 லட்சம் ஹெக்டேரில் மக்காச்சோள பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 24 ஆயிரம் ஹெக்டேர் ஆகும். இந்த ஆண்டு மக்காச் சோளப் பயிரில் அமெரிக்கன் படைப்புழுக்கள் தாக்குதல் காணப்படுகிறது.

பூச்சி மருந்துகளுக்கு இந்தப் புழுக்கள் கட்டுப்படுவதில்லை. இதனால், விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பாரம்பரிய ரகங்கள் தவிர, மற்ற அனைத்து மக்காச்சோளப் பயிர்களும் சேதமடைந்துள்ளன.

இப்படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தி அழிக்கும் `ரெடுவிட்' பூச்சிகள் விருதுநகர் அருகே உள்ள வடமலைக்குறிச்சி கிராமத்தில் விருதை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் சுமார் 10 ஆயிரம் பூச்சிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து அருப்புக்கோட்டை வேளாண் வணிக அலுவலர் முத்தையா கூறுகையில், "இந்நிறுவனத்தின் மூலம் வடமலைக்குறிச்சி கிராமத்தில் உயிரியல் கட்டுப்பாடுக் காரணி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு `ரெடுவிட்' பூச்சிகள், சுடோமோனாஸ், புளோரோசன்ஸ், டிரோகோடோமா விரிடி போன்ற உயிர் பூஞ்சானக் கொல்லிகள் பண்ணை அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

தற்போது பச்சை நிறப் பயிர்களைத் தாக்கி அழிக்கும் புழுக்களை (Catter piller) கொல்வதற்காக `ரெடுவிட்' என்ற பூச்சியை உற்பத்தி செய்து வருகிறோம். தற்போது 10 ஆயிரம் பூச்சிகள் வெளியிட தயாராக உள்ளன. இப்பூச்சி கத்தரிக்காய் காய்ப்புழு, வெண்டைக்காய் காய் புழு, தக்காளி காய்புழு, மக்காச்சோள படைப்புழு போன்ற அனைத்து வகையான புழுக்களையும் தாக்கி அழித்து உண்ணக் கூடியது.

இப்பூச்சி ஹைதராபாத்தில் உள்ள தேசிய பயிர் ஊட்ட மேலாண்மை மையத்திலிருந்து (என்.ஐ.பி.எச்.எம்.) பெறப்பட்டு தமிழகத்தில் முதன்முறையாகவும், நாட்டிலேயே அதிக எண் ணிக்கை யிலும் உற்பத்தி செய்யப்பட் டுள்ளது. படைப்புழுக்கள் தாக்குதலுக்கு ஆளான பயிரில் ஓர் ஏக்கருக்கு 10 ஜோடி `ரெடுவிட்' பூச்சிகள் போதுமானது. இவை 45-வது நாளிலிருந்து 3 நாட்களுக்கு ஒரு முறை 45 முதல் 50 முட்டைகள் இட்டு குஞ்சு பொறிக்கும். அவை மீண்டும் அடுத்த 45 நாட்களில் முட்டைகளை இட்டு குஞ்சு பொறிக்கும். பச்சையத்தைத் தின்று வாழும் அனைத்து வகைப் புழுக்களையும் `ரெடுவிட்' பூச்சிகள் முற்றிலுமாக அழித்துவிடும். ஓரிரு நாட்களில் `ரெடுவிட்' பூச்சிகள் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டுசென்று விடப்படும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

26 mins ago

ஜோதிடம்

36 mins ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்