யாருடனும் கூட்டணி குறித்து இதுவரை பேசவில்லை: காடுவெட்டி குரு மணிமண்டப நிகழ்ச்சியில் அன்புமணி தகவல்

By செய்திப்பிரிவு

கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என பாமக மாநில இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குருவுக்கு, அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கட்டப்பட உள்ள மணிமண்டபத்துக் கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், மணிமண்டபத்துக்கு அடிக்கல் நாட்டினார். பாமக தலைவர் ஜி.கே.மணி, மாநில இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர். குருவின் குடும்பத்திலிருந்து, அவரது மனைவி சொர்ணலதா மட்டுமே பங்கேற்றார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர், அன்பு மணி ராமதாஸ் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது:

வரும் மக்களவைத் தேர்தலுக்கு தயாராக இருக்கிறோம். கடந்த ஒன்பது மாதங்களாக தேர்தல் பணியாற்றி, கட்சியைப் பலப்படுத்தி வருகிறோம். தமிழ்நாடு முழுவதும் சென்று லட்சக்கணக்கான இளைஞர்களை கட்சியில் சேர்த்து தயார் நிலையில் இருக்கிறோம்.

தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். யாருடனும் இதுவரை கூட்டணி குறித்து பேசவில்லை. கூட்டணி குறித்து எதுவும் கேள்விப்பட்டால் அது வதந்தியாகத்தான் இருக்கும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

30 mins ago

ஜோதிடம்

42 mins ago

தொழில்நுட்பம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்