திண்டுக்கல் அருகே விபத்தில் 4 பேர் மரணம்

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் அருகே லாரி மீது கார் மோதியதில் பெங்களூருவைச் சேர்ந்த 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு குருபரஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் மஞ்சுநாத்(31), ஹரீஸ்(24), லோகேஷ்(28), ஜோதிபாபு(26). இவர்கள் நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்க காரில் சென்று கொண்டிருந்தனர். திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு மேம்பாலத்தில் நேற்று காலை 6 மணி அளவில் சென்றபோது முன்னால் சென்ற லாரி, அதற்கு முன்பாகச் சென்ற லாரியை முந்த முயன்றது. அதே சமயம் காரும் லாரியை முந்த முயன்றது. ஆனால் எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற லாரியின் பின்புறத்தில் அதிவேகமாகக் கார் மோதியதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. இதில் காரில் பயணம் செய்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து மதுரையைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மாரிமுத்துவை கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 mins ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்