புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தாயார் காலமானார்; ஸ்டாலின் இரங்கல்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தாயார் ஈஸ்வரி அம்மாள் தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு உயிரிந்தார். அவருக்கு வயது 96.

உடல்நலக் குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை இரவு அவர் உயிரிழந்தார்.

தாயார் உயிரிழந்ததைத் தொடர்ந்து டெல்லியில் இருந்த முதல்வர் நாராயணசாமி புதுச்சேரி வந்தடைந்தார். பூரணாங்குப்பத்திலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள ஈஸ்வரி அம்மாள் உடலுக்கு அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் காவல் துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முதல்வர் நாராயணசாமியின் தாயார் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தாயார் ஈஸ்வரி அம்மாள் வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன்.

அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, தன்னை ஈன்றெடுத்த தாயாரை இழந்த வேதனையிலிருக்கும் புதுவை முதல்வருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

5 hours ago

உலகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வேலை வாய்ப்பு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்