கோயில் கும்பாபிஷேக விழாவில் ஒயிலாட்டம் ஆடிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி: பொதுமக்கள் உற்சாகம்

By செய்திப்பிரிவு

கோயில் கும்பாபிஷேக விழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஒயிலாட்டம் ஆடியதை பொதுமக்கள் கண்டு உற்சாகம் அடைந்தனர்.

கோவை கைகோலபாளையத்தில் உள்ள சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுகுட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டு வழிபட்டனர். பின்னர் விழாவில் பாரம்பரிய நடனமான ஒயிலாட்டம் நடைபெற்றது. அப்பகுதி பொதுமக்கள் சிலர் நடமாடினர். அவர்களோடு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் ஆறுகுட்டி ஆகியோர் நடனமாடினர். அவர்களின் நடனத்தைக் கண்ட பொதுமக்கள் உற்சாகமடைந்தனர்.

அமைச்சர், எம்எல்ஏ மட்டுமல்லாமல் அங்கிருந்த அதிமுகவினரும் இணைந்து உற்சாகத்துடன் நடனமாடினர். அவர்களின் நடனத்தை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 mins ago

வணிகம்

22 mins ago

இந்தியா

24 mins ago

சினிமா

30 mins ago

ஓடிடி களம்

1 hour ago

கல்வி

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

மேலும்