5 கிலோ தங்கம் கடத்தி வந்த 2 பெண்கள் கைது

By செய்திப்பிரிவு

தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை காலையில் ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அன்ஜும்(24), சர்வாரி(22) ஆகிய பெண்களையும், தேஜஸ்(27) என்ற இளைஞரையும் சோதனை செய்தபோது அவர்களின் ஆடைகளில் ஏதோ வித்தியாசம் தெரிந்தது.

சோதனையில், அவர்களின் உள்ளாடையில் தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப் பட்டது. 3 பேரிடமும் மொத்தம் 5 கிலோ தங்கம் இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.1.5 கோடி.

சுற்றுலா விசாவில் சென்று விட்டு திரும்பி வந்தபோது 3 பேரும் தங்கக் கடத்தலில் ஈடுபட் டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

சினிமா

22 mins ago

சினிமா

31 mins ago

சினிமா

34 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

32 mins ago

சினிமா

50 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

44 mins ago

சினிமா

55 mins ago

சினிமா

58 mins ago

வலைஞர் பக்கம்

1 hour ago

மேலும்