பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்: டிசம்பரில் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தமிழக அரசு விரைவு பேருந்துகளில் பொங்கல் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியுள்ளது. மேலும், சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு அடுத்த மாதம் இறுதியில் வெளி யாகும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு விரைவு போக்கு வரத்துக் கழகம் மூலம் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, திருப்பதி, பெங்களூரூ உள்ளிட்ட இடங்களில் தினமும் சுமார் 1,000 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல், திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம், கும்ப கோணம் போன்ற போக்குவரத்து கழகங்களைச் சேர்ந்த சுமார் 800-க் கும் மேற்பட்ட விரைவு பேருந்து களும் சென்னைக்கு இயக்கப்படு கின்றன. வழக்கமான நாட்களைக் காட்டிலும் பண்டிகை நாட்களில் விரைவு பேருந்துகளின் எண் ணிக்கை மேலும் அதிகரித்து இயக்கப்படுகிறது.

இதற்கிடையே, அடுத்த ஆண்டு ஜனவரி15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை பொங்கல் பண்டிகை வருகிறது. பண்டிகையை கொண் டாட சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் ரயில், பேருந்துகளில் சொந்த ஊருக்குச் செல்வார்கள். வழக்கமாக இயக் கப்படும் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ள நிலையில், சிறப்பு ரயில்கள் அறி விப்புக்காக மக்கள் காத்திருக் கின்றனர்.

மேலும் 300 கிமீ தூரத்துக்கு மேல் செல்லும் அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்ய தமிழகம் முழுவதும் 125 இடங்களில் முன்பதிவு மையங்கள் உள்ளன. இதில், சென்னையில் கோயம்பேடு, தியாகராய நகர், திருவான்மியூர், தாம்பரம் உட்பட 19 இடங்களில் முன்பதிவு மையங்கள் உள்ளன. 60 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதன்படி, பொங்கலுக்கு சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிட்டுள்ள மக்கள் அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்யலாம். இதற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.

இது தொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: அரசு விரைவு பேருந்துகளில் 60 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியுள்ளது. அந்த வகையில் பொங்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. முன்பதிவு மையங்கள் அல்லது www.tnstc.in என்ற இணையதளத்திலும் டிக் கெட் முன்பதிவு செய்துகொள்ள லாம். தற்போது, ஏசி, படுக்கை, கழிப்பறை வசதி கொண்ட புதிய பேருந்துகள் இணைக்கப்பட் டுள்ளதால், மக்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.

மேலும், கடந்த பொங்கல் பண்டிகைக்கு மொத்தம் 12 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கினோம். இந்த ஆண்டிலும் இதை விட கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளோம். இருப்பினும், சிறப்பு பேருந்துகள் குறித்து அறிவிப்பு வரும் டிசம்பர் மாதம் இறுதியில் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

6 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

வேலை வாய்ப்பு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

கல்வி

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்