பூங்காவுக்குள் புகுந்த கடல் நீர்: தூத்துக்குடியில் திடீர் சீற்றம்

By செய்திப்பிரிவு

கடல் சீற்றம் காரணமாக தூத்துக்குடி கடற்கரையில் உள்ள பல பகுதிகளுக்குள் கடல் நீர் புகுந்தது.

சனிக்கிழமை தூத்துக்குடி கடலில் அலை வேகம் அதிகமாக இருந்தது. மாலை 4 மணியளவில் முத்துநகர் கடற்கரையில் உள்ள பூங்கா வரையிலும் கடல் நீர் புகுந்தது.

தூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழாவை முன்னிட்டு 2012-ம் ஆண்டு, அப்போதைய மாவட்ட நிர்வாகம் இக்கடற்கரையை சீர்படுத்தி, பூங்காவை உருவாக்கியது. பொழுது போக்குக்காக சைக்கிள் ஸ்டாண்டு, கார் ஸ்டாண்டு, ராட்டினங்கள் ஆகியவை தனியார் மூலம் ஒப்பந்த அடிப்படையில் அமைக்கப்பட்டன.

விடுமுறை தினமான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் இங்கு அதிகம் கூடுவர். ராட்டினங்கள் முழுவதையும் கடல் நீர் சூழ்ந்து கொண்டது. ராட்டினங்களை அமைத்துள்ளவர் கள் கூறும்போது, `விடுமுறை நாட்களில்தான் எங்களுக்கு வருமானம் வருகிறது. கடல் நீர் புகுந்ததால் இன்றும், நாளையும் பொதுமக்கள் வரமாட்டர். மிகுந்த பாதிப்புதான்’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

23 mins ago

உலகம்

21 mins ago

தமிழகம்

31 mins ago

இந்தியா

34 mins ago

சினிமா

40 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்